எம்.பி.யாக பதவியேற்றார் இசையமைப்பாளர் இளையராஜா

விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியற்றுக்கொண்டனர் . ஆனால் இளையராஜா பதவி ஏற்கவில்லை.

இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இளையராஜா தமிழில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *