துணி காயபோட்ட போது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
அண்ணாநகர்: அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் அனுஷா (25). இவர், கடந்த 4ம் தேதி வீட்டின் 2வது மாடியில் துணிகளை காயவைத்துள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்த அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அனுஷா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்