திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம்
துரைப்பாக்கம்:துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகர், சிவன் கோவில் அருகே சாலை வளைவு பகுதியில் ஒன்றரை அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வளைவான பகுதி என்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். உயிர்பலி அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.