மதுராந்தகத்தில் நெரிசல்
மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், நேற்று கடும் நெரிசல் ஏற்பட்டு, 5 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சென்னை — திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கருங்குழி அடுத்த மேலவலம்பேட்டை பகுதியில், சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, சாலை சீரமைப்பு பணி நடக்கிறது
இதனால், மதுராந்தகத்தில் இருந்து கள்ளபிரான்புரம் வரை, தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு மார்க்கத்திலும், 5 கி.மீ., துாரத்திற்கு மேல், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தன
இதுபோன்று, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் தொடரும் நிலையில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நேரத்தில், கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.