எஸ். ஆர்.எம். , வீராங்கனையர் கூடைப்பந்தில் அசத்தல்
சென்னை, அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், தென்மண்டல பல்கலை இடையிலான கூடைப்பந்து ‘சாம்பியன்ஷிப்’ போட்டிகள், கேரள மாநிலம், மஹாத்மா காந்தி பல்கலை மைதானத்தில், கடந்த 20ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தன. 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன.
இறுதிச் சுற்றின் மூன்று ‘லீக்’ போட்டிகளிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வீராங்கனையர், முதல் ‘லீக்’ சுற்றில், கோழிக்கோடு பல்கலை அணியை, 65- – 62 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றனர்.
அடுத்த ‘லீக்’ போட்டியில், கேரளாவின் மஹாத்மா காந்தி பல்கலை அணியை, 80- – 71 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினர்.
கடைசி ‘லீக்’ சுற்றில், கர்நாடகாவின் கிறிஸ்ட் பல்கலை அணியை, 63 – -57 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, எஸ்.ஆர்.எ., பல்கலை வீராங்கனையர் சாம்பியன் பட்டம் வென்றனர்.