கல்லுாரி மாணவர் விபத்தில் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி, ஆரணி அடுத்த, கொசவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நித்திஷ், 19. தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் வெங்கடேசன், 20. இருவரும், இம்மாதம், 21ம் தேதி, ஆரணியில் இருந்து சென்னை நோக்கி ‘கே.டி.எம்’ டூ – வீலரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
டூ – -வீலரை வெங்கடேசன் ஓட்டி செல்ல, நித்திஷ் பின்னால் அமர்ந்து சென்றார்.
சென்னை — கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பஞ்செட்டி அருகே முன்னால் சென்ற லாரி, திடீரென பிரேக் போட்டபோது, கட்டுப்பாடு இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
லேசான காயங்களுடன், வெங்கடேசன் உயிர் தப்பிய நிலையில், தலையில் பலத்த காயங்களுடன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நித்திஷ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.