சாலை தடுப்பில் மோதி நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து

செங்குன்றம், மாதவரத்தில் இருந்து பழைய பிளாஸ்டிக் மூட்டைகளை ஏற்றிய லாரி, நேற்று காலை 6:00 மணிக்கு, ஜி.என்.டி., சாலை வழியே, செங்குன்றத்தில் உள்ள கிடங்குக்கு சென்றது.

செங்குன்றம் அருகே சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய லாரி, தடுப்புச்சுவரில் மோதி, சாலை நடுவே நின்றது. அப்போது, கோயம்பேடில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த தடம் எண்: 114 மாநகர பேருந்து, லாரியின் பின்னால் மோதியது.

இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பேருந்து ஓட்டுனர் லேசான காயத்துடன் தப்பினார். இதில், பயணியர் யாரும் பாதிக்கப்படவில்லை. செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், ஜி.என்.டி., சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *