பூட்டை உடைத்து 11 சவரன் திருட்டு

கண்ணகி நகர், கண்ணகி நகரை சேர்ந்தவர் தேவி, 50. இளநீர் கடை நடத்தி வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரது கணவர், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனால், கணவருக்கு உதவியாக தேவி மருத்துவமனையில் இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு, தேவி வீட்டுக்கு சென்ற போது, வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 11 சவரன் நகை திருடப்பட்டது.

இதுகுறித்த புகாரின்படி, கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *