தொழிற்பேட்டையில் பீஹார் வாலிபர்கள் மோதல்

அம்பத்துார், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுனில், 28, ராஜிவ்குமார், 28. இவர்கள், அம்பத்துார் தொழிற்பேட்டை தனியார் தொழிற்சாலையில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

விடுமுறை நாளான நேற்று முன்தினம் இரவு, தொழிற்சாலையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோபமடைந்த ராஜிவ்குமார், அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து, சுனிலின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த சுனிலை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிந்த அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், ராஜிவ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *