5 சிறப்பு ரயில்கள் கார்த்திகை தீப விழாவிற்கு அறிவிப்பு
சென்னை,கார்த்திகை தீப விழாவையொட்டி, நாளையும், வரும் 14, 15ம் தேதிகளிலும், தாம்பரம் – திருவண்ணாமலை உட்பட, ஐந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே அறிக்கை:
காட்பாடியில் இருந்து, நாளையும், வரும் 14, 15ம் தேதிகளிலும், காலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலை வழியாக, அதே நாளில் காலை 10:00 மணிக்கு விழுப்புரம் செல்லும். மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில் காலை 11:15 மணிக்கு புறப்பட்டு, மாலை 3:00 மணிக்கு காட்பாடி செல்லும்.
காட்பாடியில் இருந்து, மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலை வழியாக, அதே நாளில் இரவு 7:30 மணிக்கு விழுப்புரம் செல்லும். மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:45 மணிக்கு காட்பாடி செல்லும்.
தாம்பரத்தில் இருந்து, இதே தேதிகளில் காலை 10:45 மணிக்கு புறப்படும் ரயில், அதே நாளில் மதியம் 2:45 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும். மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து இரவு 10:25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2:15 மணிக்கு தாம்பரம் வரும்.
திருவண்ணாமலையில் இருந்து, இதே மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் மாலை 4:20 மணிக்கு விழுப்புரம் வரும். மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில் மாலை 4:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 6:00 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும்.
திருவண்ணாமலையில் இருந்து வரும் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 6:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 7:40 மணிக்கு விழுப்புரம் செல்லும்.
மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில், இரவு 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 9:20 மணிக்கு திருவண்ணாமலை செல்லும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.