புகார் பெட்டி: மின் கம்பத்தால் பூந்த மல்லியில் அச்சம்
மின்கம்பத்தால் பூந்தமல்லியில் அச்சம்
பூந்தமல்லி நகராட்சியில், கந்தசாமி நகர் உள்ளது. பூந்தமல்லி டிரங்க் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கந்தசாமி நகரின் பிரதான சாலை வழியே, ஏராளமான வாகனங்கள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்குச் செல்கின்றன.
இந்நிலையில், இந்த சாலையின் நடுவே மின்சாரம் மற்றும் டெலிபோன் கம்பங்கள் இடையூறாக உள்ளன.
கம்பம் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.
எனவே, இடையூறாக உள்ள இரண்டு மின் கம்பங்களை, சாலையோரம்மாற்றி அமைக்க வேண்டும்.
– என்.கணேஷ்,
பூந்தமல்லி.