தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, வங்க கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஜூலை 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதலே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *