தமிழகம் முழுவதும் இன்று முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது சென்னை, தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் மட்டும் 85 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *