அசாம்: நெரிசல் மிகுந்த சந்தையில் திடீர் தீ விபத்து.. 150 கடைகள் தீயில் முற்றிலும் நாசம்

தீ விபத்தில் பெரும்பாலும் துணி மற்றும் மளிகைக் கடைகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோர்ஹாட், அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள சந்தையில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 150 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜோர்ஹாட் நகரின் மையப்பகுதியில் உள்ள சௌக் பஜாரில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க 25 தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன. தீயை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் தீயானது நெரிசல் மிகுந்த சந்தையில் வேகமாக பரவியது. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால், உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அழிக்கப்பட்டவை பெரும்பாலும் துணி மற்றும் மளிகைக் கடைகள் என்று அவர்கள் தெரிவித்தனர். சாலைகள் குறுகலாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தீயை அணைத்த பின்னரே, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது என, போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *