நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

அங்காரா, நில நடுக்கத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கியில், மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்கெண்டருன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. அங்கு எரிந்து போன கன்டெய்னர்களில் இருந்து பெருமளவில் கரும்புகை வெளியானது. அங்கு தொடர்ந்து 2-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் துருக்கி கடலோரக் காவல் படை கப்பல் உதவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின்போது கீழே விழுந்த கன்டெய்னர்களால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *