மத்திய உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் சப் – இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மத்திய உளவுத்துறை இயக்குனர் வீட்டில் பணியில் இருந்த சிஆர்பிஎப் சப் – இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லி, மத்திய உளவுத்துறை இயக்குனராக பணியாற்றி வருபவர் தபன் டிகா. இவரது அரசு பங்களா டெல்லி துக்ளக் சாலையில் உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உளவுத்துறை இயக்குனர் வீட்டில் நேற்று மாலை சிஆர்பிஎப் துணை சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜ்பிர் சிங் (வயது 53) என்ற அந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *