உடைக்கப்பட்ட கதவு வழியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார் ஓபிஎஸ்…!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

 

ஓ.பன்னீர் செல்வம் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார்- கே.பி.முனுசாமி கண்டனம்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக பேட்டி அளித்த அ.தி.மு.க. மூத்த தலைவர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

“அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. கடந்த பொதுக் குழு கூட்டத்தின் போது அடுத்த பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது . இதை ஏற்றுக் கொண்டுதான் ஓ.பன்னீர் செல்வம் சென்றார். ஆனால் இந்த பொதுக்குழுவிற்கு தடை வாங்க நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினார் . நீதிமன்றம் பொதுக்குழுவில் கலந்து கொண்டு உங்களின் கருத்துகளை தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறிய பிறகும் ஓ.பன்னீர் செல்வம் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சசத்தில் இருக்கிறார். அவரின் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார். நிச்சயம் கட்சி அவரை கண்டிக்கும். இதற்கு மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு முடிவு செய்வார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *