காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 62 பேர் மனு

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

இதில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, ஒன்பது ஆய்வாளர்கள் உட்பட, 62 பேரிடம் கமிஷனர் அருண் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார்.

அவற்றில், பணிமாறுதல், தண்டனை கைவிடுதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு சரி செய்தல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன.

பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

இம்முகாமில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, துணை கமிஷனர்கள் ஹரிகிரன் பிரசாத், சுப்புலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *