எஸ்.ஆர்.எம்., மாணவி பேட்மின்டனில் தங்கம்

ஐரோப்பா நாடான ஸ்லோவாக்கியா, பிராடிஸ்லாவியாவில், ‘கவாசாகி ஸ்லோவாக் – 2025’ என்ற சர்வதேச ஓப்பன் பேட்மின்டன் போட்டி, 7ல் துவங்கி 10ம் தேதி வரை நடந்தது.

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில், 27 நாடுகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர வீராங்கனையர் போட்டியிட்டனர். இந்தியா சார்பில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவி 18 வயது ஆலிஷா பங்கேற்றார்.

 

இவர், காலிறுதி போட்டியில் மலேஷியாவின் ஓ ஷான் ஸியை வீழ்த்தினார். அரையிறுதியில் குரோஷியாவின் ஜே.புச்பெர்கரை 21 – 13, 21 – 8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.

இறுதி போட்டியில் சீன தைபேயின் லியாவோ ஜூய்வை 25 – 23, 21 – 9 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கம் பதக்கத்தை கைப்பற்றினார்.

இவர், சர்வதேச தரவரிசையில் புதிய கால்தடம் பதித்தது, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக, பல்கலை நிர்வாகம் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *