மிகுந்த நிதானத்துடன் துல்லியமாக நடந்த இந்திய ராணுவ தாக்குதல்
பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நிதானத்துடனும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தியதாக மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
துல்லியமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 17 பேர் பலியாகி உள்ளனர். 55 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ராவல்பிண்டி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்