அமெரிக்க-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்: சொல்கிறார் அதிபர் டிரம்ப்
‘அமெரிக்க-இந்தியா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 2ம் தேதி வெளியிட்டார். பின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.
ந்நிலையில், அமெரிக்காவில், வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: இந்தியாவுடனான வரி பேச்சு வார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது. அமெரிக்க-இந்தியா வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். 90 நாள் வரி இடைநிறுத்தத்தின் போது ஆப்பிரிக்காவிற்குச் சென்று ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். அதை அறிவிக்க நாட்டின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.