டில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்
டில்லி சென்றுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 29) 12 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
அண்மையில் தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அவசர அழைப்பில் டில்லி சென்ற நயினார் நாகேந்திரன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
அப்போது அவருக்கு தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விகளை, மக்களுக்கு எல்லா வழிகளிலும் எடுத்துச் சொல்ல வேண்டும். போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை இதற்காகவே திட்டமிடுங்கள் என பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை அமித்ஷா வழங்கி உள்ளார்.
அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 29) 12 மணி அளவில் பிரதமர் மோடியை நயினார் நாகேந்திரன் சந்திக்கிறார். பா.ஜ., மாநில தலைவரான பின் முதல்முறையாக நயினார் நாகேந்திரன் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.